கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், யோகேஸ்வரன் (25) என்பவரின் உடல் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு கண்டறியப்பட்டது. இதற்கு இடையே, இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,