திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சென்னிமலையிலிருந்து பத்தாயிரம் பக்தர்கள் பாதயாத்திரை மற்றும் இரண்டு, சக்கர நான்கு சக்கர வாகனங்களில் வருகை புரிந்தனர். தொடர்ந்து இவர்கள் வேல் வழிபாட்டு பூஜை நடத்தினர். மேலும் இந்நிகழ்வில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் ஆன்மீகவாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.