யுபரி முலாம்பழம் உலகின் மிக விலையுயர்ந்த பழமாக உள்ளது. இது ஜப்பானில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இவற்றை விற்பனை செய்வதில்லை, ஏலம் எடுப்பார்கள். ஒரு பழத்தின் விலை ரூ. 24 லட்சம் வரை உள்ளது. இதன் உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதுதான் இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இந்த பழத்தை சாதாரண மக்களால் வாங்க முடியாது. பெரிய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமே வாங்கி சாப்பிடுகின்றனர்.