சத்தீஸ்கர்: ராய்ப்பூரில் இளம்பெண்களை வழிமறித்து இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு வீடு திரும்பிய இளம்பெண்களை சில இளைஞர்கள் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், இளம்பெண் ஒருவரின் விரலைக் கடித்துள்ளனர். இதையடுத்து, இளம்பெண்கள் அவர்களை அடித்து துரத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய இளைஞர்களை தேடி வருகின்றனர்.