டெல்லியில் உள்ள பர்கர் கிங் ஹோட்டலில் கடந்த 18ஆம் தேதி இரவு துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்த நபர் ஒருவரை இரண்டு இளைஞர்கள் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதனைப் பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர். உயிரிழந்த நபர், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியைச் சேர்ந்த அமன் ஜூன் (26) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது.