மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "விடுபட்டவர்களுக்கு உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான பணிகள் தொடங்கியுள்ளது. விரைவில் விடுபட்டவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும். விண்ணப்பிக்கும் தேதி குறித்தும் அறிவிக்கப்படும். சென்ற முறை போல விடுபட்டவர்களின் பெயர்கள் முறையாக சேர்க்கப்படும்” என்றார்.