மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல பெண்களுக்கு வரவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அதற்கு திமுக எம்.பி. கனிமொழி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இது குறித்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார் அதன்படி, பெண்கள் பயன்பெறும் விதமாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. சில பெண்களுக்கு இன்னும் உரிமைத்தொகை வந்து சேரவில்லை என்று புகார்கள் வருகின்றன. எனவே அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் தேர்தல் முடிந்தபின் சிறப்பு முகாம்கள் அமைத்து அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.