தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே வ.உ.சி. நகரில் உள்ள வீடு ஒன்றில் குக்கர் வெடித்து, பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குருசாமி என்பவரின் மனைவி சாந்தி (45) இன்று (டிச., 25) காலை வழக்கம் போல் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென குக்கர் வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சாந்தி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து கணவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.