அசாம்: நர்சிங்ப்பூர் தேயிலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் வாக்களித்த பெண்ணொருவர் ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பினார். ஆட்டோவில் உடன் பயணித்த மூன்று ஆண்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் கிருஷ்ணா மற்றும் முன்னா என தெரியவந்துள்ளது. மூன்றாவது குற்றவாளி தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.