தூத்துக்குடி: நாலாட்டின்புதூரைச் சேர்ந்தவர் காசிராஜன். இவர் நேற்று தனது மனைவி ராஜம்மாளுடன் முத்துசாமிபுரத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வளைவில் திரும்பியபோது, பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த ராஜம்மாள் நிலைதடுமாறி ஓடையில் விழுந்துள்ளார். அவரை காசிராஜன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.