ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவனை கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபாலி தேவி (42) என்ற பெண் தனது கள்ளக்காதலன் தீனதயாளுடன் சேர்ந்து தன்லாலை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அவரது உடலை ஒரு சாக்குப்பையில் எடுத்து சென்று எரித்துள்ளனர். இதையடுத்து, கோபாலி தேவி மற்றும் தீனதயாள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருவரும் தன்லாலின் உடலை சாவகாசமாக பைக்கில் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.