பாஜக ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து
பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களுக்கான கொள்கைகளை உருவாக்க இது உதவும் என்றார். சமூக நீதி மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்கு உரிமைகள் வழங்குவது மிகவும் முக்கியமானது. ஆனால்
பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் ஏன் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.