குளவிகள் தங்களது முட்டைகளை பாதுகாப்பான இடங்களில் இடுவதற்காக அத்தி பூக்களுக்குள் நுழைகின்றன. அப்போது குளவியின் மேல் ஒட்டி இருக்கும் மகரந்த துகள்கள் வழியாக மகரந்த சேர்க்கையும் நடக்கிறது. முட்டையிட்ட சிறிது நேரத்தில் பூக்களிலேயே தாய்க்குளவி இறந்துவிடும். முதலில் வெளிவரும் ஆண் இளரிகள் பெண் முட்டைகளை புணர்ந்து விட்டு இறந்து விடும். தாய் குளவி மற்றும் ஆண் இளரிகளின் சடலங்கள் அத்தியில் இயற்கையாகவே அமைந்திருப்பதால் இவை அசைவமாக கூறப்படுகிறது.