இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேற மறுத்தார். காந்தியின் கொள்கைகளை பின்பற்றியதால் ஆடம்பரத்தை அவர் விரும்பவில்லை. மேலும் இதற்கு ஆகும் செலவுகளை வேறு எங்காவது பயன்படுத்தலாம் என நினைத்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் கண்ணியத்தை காரணம் காட்டி பிரதமராக இருந்த நேருவும், படேலும் அவரை ஒப்புக்கொள்ள வைத்தனர். இருப்பினும் மாளிகையில் அவர் எளிமையாகவே வாழ்ந்தார்.