சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் இந்தியர்கள் எப்போது விண்வெளிக்கு செல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திய விஞ்ஞானிகள் ககன்யான் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்று, அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யும் திட்டம் இருப்பதாகவும், ஆனால் அதற்கு 3-4 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார்.