2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் ரசிகர்கள் 'விடாமுயற்சி' படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. லைகா நிறுவனம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் தான் இப்படத்தை வெளியிட அவர்களால் முடியவில்லை என கூறப்படுகிறது. மறுபுறம் இயக்குநர் மகிழ் திருமேனி படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.