கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி கிராமங்களின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டோரின் சடலங்கள், நிலச்சரிவு நடந்த மேப்பாடி பகுதிக்கு அடையாளம் காண ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. இதற்கிடையே அங்கு பெய்த கனமழை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.