சென்னை துரைப்பாக்கம்-நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தண்ணீர் லோடு ஏற்றிக் கொண்டு மாருதி நகர் பிரதான சாலையில் சென்ற போது லாரியின் ஒரு பகுதி சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்தது. இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ஒரு மணி நேரம் போராடி கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர்.