பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

60பார்த்தது
2024-2025-ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று (டிச., 25) முதல் 23.04.2025 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தொடர்புடைய செய்தி