கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.90 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கவும், சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளகு. மேலும், ஆடிப்பெருக்கின் போது அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.