இன்று (ஜூன் 3) அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் RCB Vs PBKS அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டியில் எப்படியாவது RCB அணி வெற்றிபெற்று முதல் வெற்றிக்கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் அணியின் வெற்றிக்காக யாகம் நடத்தி வருகின்றனர். ஐபிஎல் 2025 யாருக்கு வரலாற்றை அமைத்துக்கொடுக்கப்போகிறது என ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது.