இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து, சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்கள் 2 முதல் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று பரப்பப்படும் வாட்ஸ்அப் செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் பணியகம் (PIB), இந்தச் செய்தியைப் போலியானது என்று கூறியுள்ளது. ஏடிஎம்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் போலியான செய்திகளைப் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.