இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் நடைபெறும் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை டி.ஜி.பி ஆகியோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.