இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக போர் பேரணி நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறவித்துள்ளார். சென்னையில் நாளை (மே 10) மாலை 5 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் பேரணி தொடங்கும். சென்னை டிஜிபி அலுவலகம் அருகே தொடங்கும் பேரணி போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவடையும். இதில், முன்னாள் ராணுவ வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு, தேச ஒற்றுமையை போற்றும் வகையில் இந்த பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.