அமலாக்கத்துறையை வரவேற்க காத்திருக்கிறேன் என எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "சக்கரவியூகம் குறித்து மக்களவையில் நான் பேசியது சிலருக்கு பிடிக்கவில்லை. என் வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாக அமலாக்கத்துறையில் இருப்பவர்களிடமிருந்து எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. கைகள் திறந்து அமலாக்கத்துறையை வரவேற்க காத்திருக்கிறேன். டீ, பிஸ்கட் செலவு என்னுடையது" என கிண்டல் அடிக்கும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.