*இன்றைய சமூகத்தில் தற்காப்பு கலைகளின் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக விருதுநகரில் 120 பள்ளி மாணவ மாணவிகள் கண்களை கட்டியவாறு ஒரு மணி நேரம் 30 நிமிடம் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி கிரகாம் பெல் புத்தகத்தில் இடம்பிடித்து உலக சாதனை. *
இன்றைய சமூகத்தில் மாணவ , மாணவிகள், இளைஞர்கள், தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் தற்காப்பு கலைகளை கற்க வேண்டியது அவசியமானதாகிவிட்டது அதன் அவசியத்தை பொதுமக்களிடையே வலியுறுத்தும் விதமாக
இன்று விருதுநகர் அருகே எரிச்சநத்தம் கிராமத்தில் இயங்கிவரும் ராமபான சிலம்பக் கலைக்கூடம் சார்பில் தற்காப்புக்கலை களை ஊக்குவிக்கும் விதமாக,
கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 முதல் 12 ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகள் 120 பேர் கலந்து கொண்டு ,
இன்று தமிழர்களின் பாரம்பரிய முக்கிய கலையான சிலம்பத்தில் கண்களை கட்டியவாறு நெடுங்கம்பு, நடுக்கம்பு, வெட்டு, வீச்சு, தலை சுற்று உள்ளிட்ட 9 வகையான சுற்றுமுறைகளை தொடர்ந்து 1 மணி நேரம் 30 நிமிடம் இடைவிடாமல் சுற்றி, கிரகாம்பெல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தனர்
அதற்கான சான்றிதழ்களை கிரகாம்பெல் வேர்ல்டு ரெக்கார்டு நிர்வாகியான மாரிச்செல்வம், ஸ்ரீதர் ஆகியோர். சிலம்ப ஆசிரியர் கண்ணனிடம் வழங்கினார்கள்