கணவரை காணவில்லை மனைவி காவல் நிலையத்தில் புகார்

62பார்த்தது
விருதுநகர் மாவட்டம் முத்துலிங்கபுரத்தை சார்ந்தவர் ஜக்கம்மாள் வயது 29 இவருடைய கணவர் செல்வ பாண்டி வயது 35 செல்வ பாண்டி டாட்டா ஏசி ஓட்டுனராக பணிபுரிந்து வருவதாகவும் குடிப்பழக்கத்திற்கு ஆளான செல்வபாண்டியை அவரது மனைவி கண்டித்ததாகவும் இதனால் மனவேதனையில் இருந்த செல்வபாண்டி வீட்டை விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது இதை அடுத்து கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் அடிப்படையில் வச்சகாரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி