கொலை வழக்கு விசாரணைக்காக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர் மே 16ஆம் தேதி மீண்டும் ஆஜராக
நீதிபதி உத்தரவு
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் நண்பராக இருந்தவர் இவர் கடந்த 2021ம் ஆண்டு காணாமல் போனதாக அவருடைய மனைவி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இதில் பரிசு செல்வம் செந்தில்குமாரை சுட்டு கொலை செய்வது தெரிய வந்தது இதுதொடர்பாக ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகரில் உள்ள 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விருதுநகர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம் இன்று வழக்கு விசாரணைக்காக ஆஜரானார் நீதித்துறை நடுவர் ஐயப்பன் மே 16ஆம் தேதி மீண்டும் வரிச்சியூர் செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார் இதை அடுத்த அவர் அங்கிருந்து புறப்பட்டார்