இரு டூவீலர் மோதிய விபத்தில் இருவர் காயம்

71பார்த்தது
இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் காயம்


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் சாந்தி இவருடைய மகன் அருண்குமார் தனது இருசக்கர வாகனத்தில் நரிக்குடி திருப்புவனம் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது வல்லரசு என்ற நபர் ஓட்டி வந்த மற்ற இருசக்கர வாகனம் அதிவேகமாகவும் ஆஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து அருண்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் காயமடைந்த அருண்குமார் மற்றும் வல்லரசு இருவருமே சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அருண்குமாரின் தாய் சாந்தி அளித்த புகார் அடிப்படையில் முக்குலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி