விருதுநகர் வேலுச்சாமி நகரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை வாகனத்தில் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் வேலுச்சாமி நகர் பகுதியைச் சார்ந்தவர் அங்குசாமி இவர் தனியாக நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 25 ஆம் தேதி மாலை 6 மணி 30 நிமிடம் அளவில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும் அப்பொழுது தனது வீட்டிற்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும் மறுநாள் காலை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் காணாமல் போன இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தரக்கூடிய ஊரக காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்