இடதுசாரிகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது

71பார்த்தது
*விருதுநகரில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்ததை கண்டித்து இடதுசாரிகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. *

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் தாக்கலில் ஒன்றிய அரசு தமிழகத்தை புறக்கணித்து நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது எனக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு உள்ள துணை அஞ்சலகம் முன்பு இடதுசாரிகள் கட்சிகள் சார்பாக மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன், தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு,

மத்திய பட்ஜெட்டில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200 க்கும் மேற்பட்டோரை விருதுநகர் மேற்கு காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், முருகன் மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி