விருதுநகர் அருகே உள்ள சின்ன தாதம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் மற்றும் திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை இந்தியாவில் இதுவரை யாரும் செயல் படுத்த வில்லை என தெரிவித்த மாணிக்கம் தாகூர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மகளிருக்கு வழங்கப்படும் 1000 ரூபாயை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.