துாத்துக்குடி தனசேகரன் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி 45. இவர் கணவர் காசிசங்கருடன் விருதுநகரில் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க பையில் நகைகளை துணிகளுடன் வைத்து பிப்10 மதியம் 2: 30 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு வந்தார்.
கோவில்பட்டியில் இருந்து விருதுநகருக்கு பஸ்சில் மாலை 4: 15 மணிக்கு வரும் போது கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணிற்கு அமருவதற்காக இடம் கொடுத்தனர். விருதுநகர் ஆர். ஆர். நகர். , இறங்கி உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது பையில் வைத்திருந்த 12 3/4 பவுன் நகைகளை காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.