திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. -

52பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விருதுநகர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் காலநிலை மாற்றத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
குறிப்பாக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய காற்று மாசு எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்தால், சுவாசிப்பதற்கு தகுந்த அளவீடுகளில் மிகவும் குறைவாக இருக்கிறது. சமீப காலமாக காற்று மாசுப்பாட்டின் காரணமாக நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பெரிய நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யாமல் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதால் காற்றில் ஏற்படக்கூடி மாசுக்களின் காரணமாக நீண்ட காலத்தில் நுரையீரல் சார்ந்த ஆஸ்துமா நோய் ஏற்பட்டவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தான். சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றத்தை பார்த்தோம் என்றால் தனிநபரின் உடல் நலனில் பிரச்சினை, சமூகத்தின் உடைய சுற்றுப்புற சுகாதாரத்திற்கு பிரச்சினை,
உலகம் ழுழுவதும் சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி