விருதுநகர் நகராட்சி மற்றும் விருதுநகர் வட்டார பகுதிகளில், ஜனவரி ஒன்று முதல் மார்ச் 31 வரை வரை, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர், ஜெயசீலன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், அவர்களின் உத்தரவின்படியும், விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் குமார், மற்றும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர், செல்வராஜ் அறிவுரையின்படியும், விருதுநகர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்பவர்களை கண்டறிந்த, உணவு பாதுகாப்பு அலுவலர் அம்ஜத் இப்ராஹிம் கான், காவல்துறையின் தலைமை பெண் காவலர், மைதீனா. ஆகியோரால் மூன்று மாதங்களில் இதுவரை 4, 25, 000/- (01/01/2025 முதல் (31/03/2025 ) வரை). அபராதம் விதிக்கப்பட்டு வசூல்செய்யப்பட்டு, கருவூலம் மூலம் ஈ -சலான் (E-CHALAN) ல் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைக்காரர்களுக்கு , வாகனத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தவர்களுக்கும், எச்சரிக்கையும், அறிவுரையும், வழங்கப்பட்டு, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் விருதுநகர் நகராட்சி மற்றும் வட்டார பகுதிகளில் 2. கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.