விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் வத்திராயிருப்பு மக்களின் அடிப்படை பிரச்னைகளான வத்திராப் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி புதிய கட்டிடம் அமைத்திடவும், வத்திராயிருப்பு புறவழிச்சாலை திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும், வருசநாடு தேனி மலைப்பாதை திட்டத்தை தொடங்கிடவும் வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகளை மாவட்ட ஆட்சியரிடம் AIYF மாவட்ட செயலாளர் வக்கீல் பகத்சிங், வத்திராப் தாலுகா செயலாளர் தினேஷ்குமார், வெயில்சிவகுமார், மகாலிங்கம், ரமேஷ், விருதுநகர் வடிவேல்முருகன், மாரியப்பன் உள்ளிட்ட முன்னணி தோழர்கள் நேரில் வழங்கினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு பாலமுருகன், மாவட்ட பொருளாளர் பழனிக்குமார் ஆகியோர் உடனிருந்தார்கள்.