விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த எம். பி மாணிக்கம் தாகூர், அம்ரித் திட்டத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிலையத்தை அழகுபடுத்தவும் முதற்கட்ட பணி ரூ 9 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விருதுநகர் ரயில்நிலையம் அம்ரித் நிலையமாக செயல்படும் என்றார். ரயில் நிலையங்கள் தனியார் மயமாகாது என ரயில்வே அமைச்சர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் சுட்டிக்காட்டியதை மீறாமல் அமைச்சர் இருப்பார் என்ற நம்பிக்கையும் தெரிவித்தார்.
நேற்று தெலுங்கானா முதலமைச்சர் நடத்திய ஜெய்ஹிந்த் யாத்திரையைப்போல் நாளை தமிழக முதல்வர் சார்பில் நடத்தப்படும் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கும் பேரணியில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொண்டு நாம் இந்திய ராணுவ வீரர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்றார். அவர்கள் நமக்காக போராடுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் எடுத்திருக்கும் முடிவு பாராட்டுக்குரியது, வரவேற்கக்கூடியது. இதில் அரசியல் செய்யாமல் பாஜக வினரும், அதிமுக வினரும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.