விருதுநகரில் உடல் நலம் பாதித்த அதிமுக கிளைச் செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர்
விருதுநகர் நகர பத்தாவது வார்டு கிளை செயலாளர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பாண்டியராஜன். இவர் கடந்த மாதம் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உடல்நலக் குறைவு காரணமாக தற்பொழுது வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர் மாஃபா K. பாண்டியராஜன் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்த அதிமுக கிளை செயலாளர் பாண்டியராஜனை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகரக் கழக துணைச் செயலாளர் பா கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.