துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

77பார்த்தது
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதுவரை 18 மாவட்டங்களில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பட்டிதொட்டி எங்கும் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த ஆண்டு முதல்வர் கோப்பை போட்டிக்கு 37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் கோப்பை போட்டியில் கடந்த ஆண்டு 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு சுமார் ஒரு மடங்கு அதிகரித்து 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். 13 துறைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என புகழாரம்சூடினார். மேலும், 3 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு கோரப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக 100 விளையாட்டு வீர்ர்களுக்கு அரசு வேலை வழங்க இருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி