விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2025 முன்னிட்டு, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் முன்னிலையில், விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு. ஹனிஸ் சாப்ரா, இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில், அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாம்கள் குறித்தும், இரட்டைப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் எடுத்துரைத்தார்.