விருதுநகர் யானைக்குழாய் தெருவை சார்ந்தவர் ரகுபதி வயது (22). இவருடைய அண்ணன் ராஜ்குமார் வயது (27). இவர்களுக்கு இடையே வாடகை தகராறு இருந்து வந்ததாகவும், இதை மனதில் வைத்துக்கொண்டு ராஜ்குமார் ரகுபதியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.