விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களும், ஆதிதிராவிடர் மற்றும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்குச் சொந்தமான வலம்புரி விநாயகர் கோவிலும் அதற்கு அருகில் அவர்களுக்குச் சொந்தமான கிணறும் உள்ளது. இதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பறையர் சமூகத்திற்குச் சொந்தமான வடக்கத்தி அம்மன் கோவில் மற்றும் கிணறு உள்ளது.
மேலும் தங்களுக்குச் சொந்தமான ஐந்து செண்ட் நிலத்திற்கு பட்டா கேட்டும் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று கூறி, இன்று தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு எதிராகச் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை முறையாக விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நத்தம் புறம்போக்கில் உள்ள 5 செண்ட் நிலத்தை தாங்கள் 100 ஆண்டுகளாக அனுபவித்து வருவதால், அந்த இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறி இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.