கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் முருகன் நகர் சாத்தப்பன் மகன் அண்ணாமலை (34) அவருடைய நண்பர் வெங்கடேஷ் பார்ப்பதற்காக கோயமுத்தூரில் இருந்து புறப்பட்டு விருதுநகர் PRC
பேருந்து நிறுத்தத்தில் இறங்கி KVS மேல்நிலைப்பள்ளி வழியாக நடந்து வந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஒரு நபரும் வந்து வழிமறித்து எங்கே செல்கிறாய் என்று கேட்டுக் கொண்டு இருக்கும்போது வாகனத்தின் பின்னால அமர்ந்தவர் ஒரு கையில் நீளமான கத்தியை வைத்துக் கொண்டு கழுத்தில் இருக்கிற செயினை அறுத்துக் கொண்டு மதுரை ரோடு பக்கம் சென்று விட்டனர். மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகிறனர்.