விருதுநகர் மாவட்டம் மாவட்ட காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுத்து பிரிவு மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவும் அக்கா திட்டத்தை காவல்துறை சார்பில் இன்று வே. வ. வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது இதில் பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் காவல்துறையை சேர்ந்த பெண் காவலர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார்
இணைப் பேராசிரியர் கணினி அறிவியல் துறை தலைவர் அன்புச்செல்வி வரவேற்புரை ஆற்றினார்
பள்ளியின் செயலாளர் மதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்
இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து விடுபடுவது எப்படி.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து விடுபடுவது எப்படி.
முன்னெச்சரிக்கையாக செயல்படுவது. பிரச்னை ஏற்பட்டால் அவசர எண்களில் போலீசுக்கு தகவல் தெரிவிப்பது.
சைபர் கிரைம் குற்றங்கள், அதனைத் தடுப்பது குறித்தும், முதியோர் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், அதற்கான சட்ட நடவடிக்கைகள், பாதிப்பில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் கவுன்சிலிங் போன்றவை குறித்து, விரிவாக எடுத்துரைத்தனர். பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.