விருதுநகர்: எம்ஜிஆரின் நினைவு தினத்தை அனுசரித்த அதிமுகவினர்

79பார்த்தது
விருதுநகரில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

விருதுநகர் கருமாதிமடம் பகுதியில் விருதுநகர் நகரக் கழகம் சார்பில் புரட்சித்தலைவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எம்ஜிஆர் அவர்களின் முழு உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வரதராஜன், கழக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் கலாநிதி அவைத்தலைவர் விஜயகுமரன் நகரக் கழக செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வி.ஆர். கருப்பசாமி, மச்சராஜா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி