நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சிக்கு வரப்போவது அதிமுக தான்! கட்சியில் உழைக்கக் கூடியவர்கள் வாழ வேண்டும் என விருதுநகரில் பாக செயலாளர் மற்றும் பாக நிர்வாகிகள் நியமனம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேச்சு.
விருதுநகர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டி, அக்ரஹாரப்பட்டி வாசகரா பட்டி காமராஜபுரம் உள்ளிட்ட பகுதியில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன் ஏற்பாட்டில் பாகச் செயலாளர்கள் மற்றும் பாக நிர்வாகிகள் நியமனம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர் முன்னாள் வாரிய தலைவர் ஜான் மகேந்திரன் கலந்துகொண்டு பாகச் செயலாளர்கள் மற்றும் பாக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி வரும் 2026 இல் நடைபெற உள்ள தேர்தலில் ஆட்சிக்கு வரப்போவது அதிமுக தான் கட்சியில் உழைக்கக் கூடியவர்கள் வாழ வேண்டும் மேலும் நல்ல நிர்வாகத்தை தரக்கூடிய ஆட்சி வர வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவை தலைவர் விஜயகுமரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்