தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

63பார்த்தது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் விருதுநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார். மேலும் விருதுநகர் திண்டுக்கல் சிவகங்கை, தேனி, மதுரை , உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த விவசாய பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மானாவாரி விவசாயம் பெரும்பாலும் தென் மாவட்டங்களில் நடைபெற்று வருவதாகவும் ஆனால் மானாவாரி விவசாயிகளை விவசாயத்தை காப்பதற்கான பெரும் முன்னெடுப்புகள் எடுக்காத பட்சத்தில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.