சிவகாசி: 2 ஈச்சர் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் பலி

51பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி இராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை தென்காசி மணிகண்டன் (31) என்பவர் ஓட்டி வந்தார். மகன் காளிதாசன் (34) என்பவரும் உடன் வந்தார். அப்போது பிராய்லர் கோழி லோடு ஏற்றிச்சென்ற ஈச்சர் லாரி நரிக்குடி - பார்த்திபனூர் சாலையில் மாயலேரி அருகேயுள்ள தனியார் பெட்ரோல் பல்க் அருகே சாலையில் ஈச்சர் லாரியை நிறுத்தி விட்டு இருவரும் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அதே நரிக்குடி பகுதியிலிருந்து இராமநாதபுரத்திற்கு கோழிகளை ஏற்றிச்சென்ற இராமநாதபுரம் பிரபு (30) ஓட்டி வந்த மற்றொரு ஈச்சர் லாரியொன்று அதிவேகமாக வந்து நின்றுகொண்டிருந்த ஈச்சர் லாரி பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுநீர் கழிக்கச் சென்ற ஈச்சர் லாரி டிரைவரான தென்காசி சிவகிரியைச் சேர்ந்த மணிகண்டனும், ஈச்சர் லாரி மீது மோதிய மற்றொரு ஈச்சர் லாரி டிரைவரான பிரபு என்பவரும் பலத்த காயமடைந்தார். 

இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் விபத்தில் சிக்கி காயமடைந்த இருவரையும் மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த தென்காசி சிவகிரியைச் சேர்ந்த மணிகண்டன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி