விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மனைவி பெத்தம்மாள். வேலுச்சாமி காரியாபட்டி பாண்டியன் கிராமத்தில் உள்ள வங்கி முன்பு சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது, ஆனந்த வேலு என்பவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த வேலுச்சாமி காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காயமடைந்தவரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.