டிப்பர் லாரி தனியார் பேருந்து மீது மோதி விபத்து

56பார்த்தது
விருதுநகர் அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று திருச்சுழி வழியாக நரிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சுழி அருகே மைலி விலக்கு பகுதியில் எதிரே அதிவேகமாக நரிக்குடியிலிருந்து திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்த, தனியார் கல்குவாரி டிப்பர் லாரி ஒன்று, நரிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது‌ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்த பூமிநாதன்(49) பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் குருந்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா(17), களத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த விஜய தர்ஷினி(16) மற்றும் மானூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சக்தி(18) ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‌ விபத்து ஏற்படுத்தி விட்டு அந்த டிப்பர் லாரி ஓட்டுநர் லாரியுடன் அங்கு இருந்து தப்பி சென்றார். திருச்சுழி போலீசார் லாரியை விரட்டிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். டிப்பர் லாரி ஓட்டுநர் சின்னத்துரை என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருச்சியில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி